இந்தியா, ஏப்ரல் 17 -- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார். சிம்ம ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் இருந்து வருகிறது.

ஆயில்யம் நட்சத்திரம் குருவின் நட்சத்திரமாக இருந்து வருகிறது. இந்த நட்சத்தினருக்கு 20 வயது வரை கேது திசை உள்ளது. படிப்பில் இருந்த தடை, தாமதங்கள் அனைத்து விலகும். முன்னேற்றம் அடைவீர்கள்.

40 வயது வரை இருப்பவர்களுக்கு சுக்கிர திசையாக உள்ளது. சகோதர வகையில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் கைகூடி வரும். வேலைகளில் முயற்சிகளை வெளிப்படுத்தினால் சம்...