இந்தியா, ஏப்ரல் 4 -- கார்த்திகை நட்சத்தரம் மேஷ நட்சத்திரம் ஒன்றாம் பாதம், ரிஷப ராசியில் 2,3 மற்றும் நான்காம் பாதத்தை கொண்டதாக உள்ளது. கார்த்திகை நட்சத்திர்ததினர் சூரிய பகவானின் அனுகலம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

குருவின் சஞ்சாரம் பெறும் ரிஷப ராசியின் மூன்று பாதங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ளது. முதல் மூன்று மாதங்கள் சஞ்சாரிக்கும் குரு அக்டோபர் முதல் பிப்ரவரி மாத காலகட்டத்தில் நிவர்த்தி ஆகிறார்.

கடந்த காலங்களில் இருந்த மனகுழப்பம் நீங்கும். தெய்வ அனுகூலத்தால் விரயம், நஷ்டம், செலவுகள் எல்லாம் குரு பகவானால் விலகும். தடுமாற்றம் இருந்த நிலைமை மாறி நன்மை, தீமைகளை பிரித்து பார்க்கும் ஆற்றலை தருவார்.

பொருளாதார ரீதியில் எந்த பிரச்னையும் இருக்காது. வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏராளாமாக உருவாகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செல்ல ...