இந்தியா, பிப்ரவரி 12 -- Guru Peyarchi: நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் தேவர்களின் ராஜ குருவாக திகழ்ந்து வருகின்றார். குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய அனைத்து செயல்பாடும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வரை இதே...