இந்தியா, ஜனவரி 31 -- Guru 2025 Palangal: நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் தனது இடத்தை மாற்றினார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் தனது இடத்தை மாற்றுகிறார். தற்போது ரிஷப ராசியில் குரு பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற பிப்ரவரி மாதம் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

குரு பகவானி...