இந்தியா, நவம்பர் 27 -- திருச்சி : தொட்டியம் தாலுக்கா தோளூர்பட்டியில் சேர்ந்தவர் விவசாயி மாசி. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இவரது வீட்டின் உள் அறையில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறியது.

இதில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் வீட்டில் வைத்திருந்த பத்திரம், ஆவணங்கள், டிவி, உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், துணை தாசில்தார் கவிதா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மாசி குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அப்போது வருவாய் துறை அலுவலர...