இந்தியா, மார்ச் 8 -- பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர ஜோடி சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியா ஜோடிகளான மேன் வெய் சோங் மற்றும் காய் வூ டீ ஆகியோரை எதிர்கொண்டது

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றியை பெற்றது. அத்துடன் இந்த போட்டி 32 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து காலிறுதி போட்டியில் தாய்லாந்து ஜோடிகளான ஜோம்கோ சுபக் மற்றும் கெட்ரன் கிட்டினுபோங் ஆகியோர் எதிர்கொள்ள இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook...