இந்தியா, நவம்பர் 30 -- உத்தரபிரதேசம் மாநிலம் பிரோசாபாத் அருகே ஜஸ்ரானா என்ற பகுதியில் அமைந்திருக்கும் பதம் நகரில் ராமன் குமார் என்பவர் வசித்து வந்தார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நகைக் கடை உரிமையாளரான இவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.

இதையடுத்து இவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து ஆக்ரா, எட்டா, மெயின்புரி மற்றும் பிரோசாபாத் ஆகிய இடங்களில் உள்ள 18 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 12 ஸ்டேஷன்களின் காவல்துறை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சார்ட் சர்க்யூட் காரணமாக இந்த ...