இந்தியா, பிப்ரவரி 9 -- கோவை, குனியமுத்தூர் அறிவொளி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை அடுத்த குனியமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களை சேமித்து வைப்பதற்காக தனியாக குடோன்களும் இயங்கி வருகின்றன.

இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷீத் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் குனியமுத்தூர் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைக்கடைகளில், நகைகளை வைக்க பயன...