இந்தியா, நவம்பர் 29 -- பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் எச் பிரிவில் தென்கொரியா - கானா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அடுத்தடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க என இந்த ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே நடைபெற்றது.

ஆட்டத்தின் 24 மற்றும் 34வது நிமிடத்தில் கானா வீரர்கள் முகமது சலிஸ், முகமது குடுஸ் ஆகியோர் கோல் அடித்த முதல் பாதியில் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய தென்கொரிய வீரர்கள் 58, 61வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்த சமன் செய்தனர். இந்த இரண்டு கோல்களையும் தென் கொரிய வீரர் சோ கியூ சங் அடித்தார்.

இதைத்தொடர்ந்து மேலும் ஒரு கோல் முன்னிலை பெறுவதற்கான முயற்சியில் இரு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டன. இதற்கு கைமேல் பலனால ஆட்டத்தின் 6...