இந்தியா, ஜனவரி 12 -- தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் படிக்கும் பழக்கம் எப்படி இருக்கும்? அவர்கள் நம்மிடம் கூறுவது முற்றிலும் உண்மையா? அவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகள் என்ன? பொய்கள் என்ன? ஏனெனில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள்தான் பர்ஃபெக்ட்டானவர்கள் என்ற எண்ணம் உள்ளது. அவர்களை அனைவரும் பின்பற்றவேண்டிய நிலையும் உள்ளது. அவர்கள் படிக்கும் பழக்கம் குறித்து எப்போதும் ஒரு பேச்சு இருக்கும். எனினும், அவர்களின் வெற்றிக்காக அவர்கள் கூறும் அனைத்தும் உண்மை கிடையாது. அவர்கள் படிக்கும் பழக்கம் குறித்து நிலவும் கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

எனக்கு இடைவெளியே தேவையில்லை நான் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பேன் என்பது கட்டுக்கதை. இந்த வார்த்தையை நாம் நிச்சயம் நம் பள்ளிப் பருவத்தில் கேட்டிருப்போம். அதிக மதிப்பெண்கள் பெ...