இந்தியா, ஏப்ரல் 29 -- ஈரோடு, சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சில சிசிடிவி கேமராக்கள் பழுதாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காவல்துறை சார்பில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் வாக்குப...