இந்தியா, ஏப்ரல் 1 -- எதிர்நீச்சல் சீரியல் திங்கள் முதல் சனி வரை சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

''உன் குடும்பமே உன்னை வலைவீசி தேடுறாங்கே போல, வீட்டுக்கு வந்த அந்த ஜோசியர் மக்கு பையன் வேற, உன்னால் ஒரு குழப்பம் வரும்ன்னு ஒரு குண்டைத்தூக்கிப் போட்டுப் போயிட்டான்'' என கதிரிடம் உசுப்பேத்திவிடுகிறார், கதிருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் அறிவுக்கரசி.

அடுத்த காட்சியில் ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா ஆகியோர் அமர்ந்து பேசுகின்றனர். அதில், 'பிள்ளைகளைக் கூட்டி வந்துவைத்துவிடலாமா' எனக் கேட்கிறார், நந்தினி. அதற்குப் பதிலளிக்கும் ஈஸ்வரி, 'அங்கு என்ன நிலவரம்ன்னு தெரியலை. பார்த்தபிறகு முடிவு எடுத்துக்கலாமா?' எனச் சொல்கிறார். அப்போது அருகில் அமர்ந்து இருக்கும் ஜனனியும் நந்தினியும் ரேணுகாவும் சரியென்று தலையாட்டுகின்றனர்.

அடுத்து ஒரு காரில்...