இந்தியா, பிப்ரவரி 17 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, எந்த பதிலும் அளிக்காமல் கோவை விமான நிலையத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கிளம்பிச் சென்றார்.

அவிநாசி அத்திக்கடவு திட்ட பாராட்டு விழாவில், ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் இருந்ததற்கும், அதை வைக்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழா குழுவினருக்கு அறிவுறுத்தாமல் இருந்தற்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்திருந்தார். அந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்த்தார்.

மேலும் படிக்க: EPS VS Sengottaiyan: அதிமுக மேடைகளில் ஈபிஎஸ் பெயரை சொல்லாதது ஏன்? உடைத்து பேசிய செங்கோட்டையன்!

இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டங்களில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை தெரிவ...