இந்தியா, பிப்ரவரி 14 -- அதிமுக பொதுக் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாதது ஏன் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேச...