இந்தியா, ஜனவரி 30 -- ECR Incident: கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை மற்றொரு காரில் இருந்த நபர்கள் துரத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை துரத்தும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் கார் உரிமையாளரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கார் பலரிடம் கை மாறியதால் அதில் வந்த இளைஞர்கள் யார் என்பதை கண்டறிவது போலீசாருக்கு சவ...