இந்தியா, மார்ச் 29 -- மியான்மரில் நேற்று 7.7 என்ற ரிக்டர் என்ற அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் 5.1 என்ற ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மியான்மரில் நேற்று மட்டும் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் ஆளும் ராணுவம் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் அது மீண்டும் அதிகரித்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,408 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 139ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக மியான்மர் நாட்டின் 2ஆவது பெரிய நகரமான மாண்டலே மற்ற...