இந்தியா, ஏப்ரல் 13 -- Earthquake: இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9:18 மணியளவில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி.மீ என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மியான்மர், தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டன. ஒரு மணி நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்த மக்கள் பீதியடைந்தனர்.

நிலநடுக்கத்தின் சரியான இடம் அட்சரேகை 31.49 N, தீர்க்கரேகை 76.94 E. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

இதனிடையே, தஜிகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை 16 கி.மீ (10 மைல்) ஆழத்தில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தை (ஈ.எம்.எஸ்.சி) மேற...