இந்தியா, ஜனவரி 28 -- Director Mysskin: கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவின் பேசுபொருளாக மாறி இருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவர், படவிழாவில் பேசிய அநாகரீக வார்த்தைகள் தான் இத்தனைக்கும் காரணம். அத்துடன் அவர், இசையமைப்பாளர் இளையராஜாவை அநாகரீகமாக பேசியதும் காரணம்.

சிலர், மிஷ்கின் பேச்சுக்கும், சிலர் மிஷ்கினின் இளையராஜா பற்றிய பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூடியூப் சேனலில் மிஷ்கினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், "மிஷ்கின் ஒரு வில்லங்கமான ஆளு. அவரு தண்ணி போடுவேன், சாரயம் காய்ச்சத் தெரியும்ன்னு எல்லாம் சொல்லுவாரு. மேடை நாகரீக மரபை மீறி பேசி வருவார்.

இளையராஜா இல்லையென்றால் எனக்கு வாழ்க்கை இல்லை என்று சொன்ன நாக்கு தான் இப்போ அவன்...