இந்தியா, ஏப்ரல் 9 -- Dhanush: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கியதின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்; தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றன. அதனை தொடர்ந்து உதயநிதியுடன் மாமன்னன், வாழை உள்ளிட்ட அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ், தற்போது துருவை வைத்து பைசன் படத்தை இயக்கி இருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் அடக்குமுறையை மையக்கருவாக வைத்து படம் எடுக்கும் இவருடன் முன்னதாகவே தனுஷ் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அந்தப்படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகாமல் இருந்தன. இந்த நிலையில் அப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து மாரிசெல்வராஜ் வெளியிட்ட...