இந்தியா, மார்ச் 22 -- குன்னூர் பகுதியில் வெந்நீரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியமே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகனுக்கு வரும் மார்ச் 27ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்க அவர்களது உறவினர்கள் பாலக்காட்டில் இருந்து வந்திருந்தனர். கார்த்தி காளியம்மாள் மற்றும் அவர்களது 3 வயது மகள் சரண்யா ஆகியோர் வந்திருந்த நிலையில் நேற்று இரவு ஹீட்டர் மூலம் வாளியில் தண்ணீரை சூடேற்ற வைத்து இருந்தனர். அப்போது அருகே சிறுமி சரண்யா விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராத விதமான சிறுமி சரண்யா தண்ணீரில் தவறி விழுந்தது. இதி...