இந்தியா, பிப்ரவரி 14 -- Chevvai Vakra Nivarthi: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தோராயமாக 12 ராசிகளின் சுழற்சியை முடிப்பதற்கு செவ்வாய் பகவான் 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். கோபத்தின் நாயகனாக திகழ்ந்துவரும் செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் வக்கிர நிபர்த்தி அடைகின்றார். செவ்வாய் பகவானின் வக்கிர நிவர்த்தி பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொட...