இந்தியா, பிப்ரவரி 7 -- Chevvai Peyarchi: நவகிரகங்களில் கோபத்தின் நாயகனாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் 12 ராசிகளின் சுழற்சியை முடிப்பதற்கு தோராயமாக 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் செவ்வாய் பகவான் பின்னோக்கிய பயணத்தில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். ...