சென்னை,புதுச்சேரி, மார்ச் 31 -- நடிகர் விஜய்யின் தந்தையும், புரட்சி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நமக்கு நன்கு அறிந்தவர். விஜய்யின் சினிமா பயணத்தில் முக்கியமானவர். சில ஆண்டுகளுக்கு முன், விஜய் உடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, ஒதுங்கி இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், அதற்கு காரணமாக புஸ்ஸி ஆனந்தை குறிப்பிட்டார். அவர் மீது விமர்சனங்களை வைத்தார். இன்று மகன் விஜய் உடன் எஸ்ஏசி இணக்கமானாலும், பிரிவின் போது அவர் அளித்த பேட்டி இன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. கலாட்டா தமிழ் யூடியூப் தளத்திற்கு எஸ்.ஏ.சி., அளித்த அந்த பேட்டி இதோ:

''எனக்கும் விஜய்க்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை. மீடியாவும், மத்தவங்களும் தான் அப்படி சொல்றாங்க. நானோ, விஜய்யோ எப்போவாது , அப்படி தெரிவித்திருக்கிறோமா? விஜய் படம் ரீலீஸ் ஆகும் நாளில், ஆதரவற்ற இல்லங்களில் அன்னதானம், ரத்த தானம...