இந்தியா, பிப்ரவரி 1 -- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மூத்தக் குடிமக்களோஉக்கு பல்வேறு சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், பின்னர் மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இன்று காலை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். பின்னர் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வளர்ச்சியை துரிதப்படுத்துதல், உள்ளடக்கிய வளர்ச்சி...