இந்தியா, பிப்ரவரி 27 -- மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவது நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம் செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பியதால் கடுப்பானார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஞாயிற்று கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திங்கட்கிழமை கோவையில் முக்கிய பிரமுகர்கள் பலர் பா.ஜ.கவில் இணைவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைவார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நேற்று காலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், வடகோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனி...