இந்தியா, ஏப்ரல் 22 -- முகத்தின் அழகைக் கெடுக்கும் கண்களுக்குக் கீழே கருவளையம், முகத்தில் கரும்புள்ளிகள் போன்றவை பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே இருந்த இந்தப் பிரச்னையை இப்போது வயது வித்தியாசமின்றி ஆண்கள், பெண்கள் என அனைவரும் சந்தித்து வருகின்றனர்.

நீண்ட நேரம் லேப்டாப், மொபைல் போன்றவற்றைப் பயன்படுத்துதல், பணிச்சுமையால் தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள், அலர்ஜி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் கண்களுக்குக் கீழே கருவளையத்தை ஏற்படுத்தும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் தொல்லை தரும். பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.

கண்களுக்குக் கீழே முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகத்தை சேதப்...