இந்தியா, ஏப்ரல் 30 -- சூர்யா, ஜோதிகா, சிவகுமார் இடையே நடக்கும் பிரச்சினைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனியார் சேனல் ஒன்றிற்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, "பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிவகுமார். பல நடிகைகளுடன் ஒன்றாக நடித்தாலும், கிசுகிசுக்களை தன் பக்கம் அண்ட விடாதவர் என்று இவருக்கு ஒரு பெயர் உண்டு.

திரைத்துறையில் இருந்தாலும், இவர் சாமானிய பெண் ஒருவரையே கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அவர் மகன் சூர்யாவோ, நடிகை ஜோதிகாவை காதலிப்பதாகவும், அவரை கல்யாணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாகவும் சிவகுமாரிடம் சொன்னார்.

அவரோ, தங்கை இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது, நீ வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவளின் கல்யாணத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி, அந்த காதலை தட்டிக் கழிக்க முயன்றிருக்க...