இந்தியா, பிப்ரவரி 2 -- சென்னை ஏடிபி சேலஞ்சர் 100 ஓபன் டென்னிஸ் தொடர் ஆறாவது முறையாக வரும் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது.

பிப்ரவரி 5ஆம் தேதி பிரதான சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 10 இரட்டையர் பிரவு போட்டி, 11ஆம் தேதி ஒற்றையர் பிரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இதில் மொத்தம் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாட இருக்கிறார்கள். இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவின் நம்பர் 2 வீரர் ராம்குமார் ராமநாதன், செக் குடியரசு நாட்டின் வீரர் நிகோலோஸ் பாஷில்லாஷ்விலி ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா சார்பில் முகுந்த் சசிக்குமார், சித்தார்த் விஸ்வகர்மா, மணீஷ் க...