இந்தியா, மே 23 -- நீட் தேர்வை மையப்படுத்திய 'அஞ்சாமை'படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் முதன்முதலாக பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன.

நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகி இருக்கும் படம் தான் 'அஞ்சாமை'. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குநர்கள் மோகன் ரா...