இந்தியா, ஏப்ரல் 20 -- 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்த ஹிட்லர் சிறு வயதிலேயே தந்தையால் கொடுமைகளுக்கு உள்ளானர். தனது 16ஆம் வயதில் தனது டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்தி கொண்ட அவர், ஓவியத்தில் கவனம் செலுத்தினார்.

'உயர் குணமுள்ள ஓநாய்' என்ற பொருள்படும் ஜெர்மன் வார்த்தையான 'அடால்ப்' என்ற பெயரை தன் பெயரின் முன்னொட்டாக அவர் பயன்படுத்த தொடங்கினார்.

தனது 21ஆம் வயதில் சொந்தமாக படங்களை வரைந்து வணிகர்களிடமும் சுற்றுலா பயணிகளிடமும் விற்று ஹிட்லர் தனது அன்றாட வாழ்கையை நடத்தி வந்தார்.

யூதர்களும் அவர்களின் பொய்களும் என்ற நூலை கிறிஸ்தவ சமயத்தின் ஒரு பிரிவான 'Protestantism' (சீர்த்திருத்தத் திருச்சபைகள்) - பிரிவின் தந்தை என அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதி இருந்தார். இந்த நூலை வாசித்ததற்கு பின்னர் யூதர்கள் மீது ஹிட்லர் வெறுப்பு அடைய காரணமாக அ...