இந்தியா, பிப்ரவரி 14 -- தேமுதிகவுக்கு ராஜ்ஜியசபா எம்.பி சீட் தர எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்ஜியசபாவில் தமிழ்நாட்டில் இருந்து 18 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதில் 6 எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

மேலும் படிக்க: Rajya Sabha Elections 2025: ராஜ்ஜியசபா எம்பி ஆகும் கமல், விஜய பிரபாகரன்! கழற்றிவிடபட்டாரா வைகோ?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை எம்பி தேர்தலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டனர். பா...