இந்தியா, மார்ச் 15 -- பிரபல நடிகையான செளந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் அவரது சகோதரருடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது செளர்ந்தர்யாவிற்கு 31 வயது. நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அவரை பிரபல நடிகர் மோகன்பாபு கொலை செய்து அதனை விபத்தாக சித்தரித்து விட்டதாக சமூக ஆர்வலர் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்தார்.

மேலும் படிக்க | செளந்தர்யா முதல் சில்க் வரை.. தொடரும் மரண மர்மம்.. இறந்த பின்னரும் சர்ச்சையை சந்தித்த சில நடிகைகளின் பட்டியல்!

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் செளந்தர்யாவின் கணவர் ரகு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ' கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் இருக்கும் சொத்தை தொடர்புபடுத்தி மோகன்பாபு மற்றும் செளந்தர்யா குறித்து தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதை ந...