இந்தியா, ஏப்ரல் 26 -- பிரபல நடிகையான மோகினி, இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியது ஏன் என்பது குறித்து 2 வருடங்களுக்கு முன்னதாக ஐபிசி தமிழ் சேனலுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, " நான் தஞ்சாவூர் பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவள். கணவரும் பிராமின் தான். வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் நான் கடுமையாக கஷ்டப்பட ஆரம்பித்தேன். தினம், தினம் வேதனைகள் வந்து வீட்டு கதவைத் தட்டின.

இதனையடுத்து, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கேள்வி கேட்க ஆரம்பித்தேன். நான் செய்யும் பூஜைகள், புனஸ்காரங்கள் ஏன் எனக்கு பயன் தரவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு சரியான விளக்கமோ அல்லது வழியோ, அந்த மதத்தில் இருந்து கிடைக்கவில்லை.

அப்போது, எனக்கு வழி காண்பித்தது; எனக்கான தீர்வை க...