இந்தியா, ஜனவரி 26 -- Actress Devayani: தமிழ் மக்களுக்கு மிகவும் பரிட்சையமான நடிகை தேவயானி. திருமணத்திற்கு பின் அதிகம் படம் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர், பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இப்போது அவர் இயக்கிய குறும்படம் ஒன்று சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.

கைக்குட்டை ராணி என்ற பெயரில் அவர் இயக்கிய குறும்படம் மூலம் தேவயானி கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் அடி எடுத்து வைத்துள்ளார். 20 நிமிடங்கள் கொண்ட இந்த கைக்குட்டை ராணி திரைப்படம் குழந்தைகளின் உணர்வுகளை மையப்படுத்தி எடுத்ததற்காக 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகளின் குறும்பட விருதை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த குறும்படம் உருவாக்க ஆரம்பித்தது முதல், இயக்கி வெளியிட்டது வரையிலான பயணத்தை எஸ்எஸ் மியூசிக் யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ள...