இந்தியா, நவம்பர் 27 -- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக வருகிற 28ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பண்டிகை தினங்களை தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5 : 15 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய மின் இணைப்பு ...