இந்தியா, மார்ச் 16 -- A.R.Rahman: உடல்நலக்குறைவு காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இதுதொடர்பாக வெளியான தகவல்களில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பியதாகவும், அப்போது அவருக்கு உடல் நலக் குறைவு இருந்ததாகவும் தெரிகிறது. பின்னர், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

ஆனால், இதுவரை அவரது உடல்நிலை குறித்த...