இந்தியா, மே 13 -- தமிழ்நாட்டில் இருக்கும் மாதர் சங்கம் தொடங்கி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்கள் பல தரப்பினர் வரவேற்கும் ஒரு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அது தான் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகள் சிபிசிஐடி தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த தீர்ப்பினை கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி அளித்துள்ளார். இந்த தீர்ப்பு பாலியல் குற்ற வழக்கில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!...