இந்தியா, ஏப்ரல் 29 -- வேறு ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடம் மாற்றத்தை செய்வார்கள். அந்த காலகட்டத்தில் ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான். இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு செல்கின்றார். அந்த காலகட்டத்தில் குரு பகவான் மிதுன ராசியில் நுழைவார்.

குரு மிதுனத்திலும் ராகு கும்பத்திலும் அமைந்திருக்கின்ற அம்சம் நவபஞ்ச யோகத்தை உருவாக்க உள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நவபஞ்ச யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட...