இந்தியா, ஏப்ரல் 2 -- அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், புதுடெல்லிக்கான சீனாவின் பெய்ஜிங்கின் தூதர் கூறுகையில், அதிக இந்திய தயாரிப்புகளை இறக்குமதி செய்யவும், வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது எனத் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவும் சீனாவும் ஆசியக் கண்டத்தில் இருக்கும் இரு அண்டை நாடுகள் ஆகும். இவை தங்கள் இமயமலை எல்லையில் 2020ஆம் ஆண்டில், எல்லை மோதலுக்குப் பிறகு, தங்கள் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், ஏப்ரல் 1ஆம் தேதி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கூறினார்.

முன்னதாக, சீன தூதர் சூ ஃபெய்ஹோ...