இந்தியா, மார்ச் 3 -- பிரான்சின் கேன்ஸ் நகரில் 24.02.2025 முதல் 02.03.2025 வரை நடைபெற்ற "38வது கேன்ஸ் ஓபன் " சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் சாம்பியன் பட்டம் வென்றார். 6 GM, 21 IM உட்பட 25 நாடுகளை சார்ந்த 147 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் 6 சுற்றுகளில் 3 வெற்றி, 3 டிரா என 4.5 புள்ளிகளுடன் பின்தங்கி இருந்த இந்திய வீரர் இனியன் 7 மற்றும் 8 வது சுற்றில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல் இடத்தை சமன் செய்தார். அதனை தொடர்ந்து இறுதி சுற்றில் சக நாட்டு வீரர் GM ப்ரனேஷ்-ஐ வீழ்த்தி GM இனியன் முதல் இடம் பிடித்தார். இந்தியாவின் IM ஆராத்யா கார்க் 2வது இடமும், தற்போதைய உலக ஜூனியர் சாம்பியன் கசக்ஹஸ்தான் வீரர் GM கஸ்ய்பேக் நோன்ஜ்ர்பேக் 3ம் இடம் பிடித்தனர்.
முன்னதாக, ப...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.