இந்தியா, ஜூன் 12 -- பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், " பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் படி இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. வருகின்ற காலத்தில் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிவுறுத்தலின் படி மற்ற பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

மத்திய பாஜக அரசு ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. 2014, 2019 ஆம் ஆண்டு நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் எடுத்து படிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிஇல் கூறியபடி பல கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணங்கள் மீட்கப்பட்டுள்ளது, பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்...