இந்தியா, மார்ச் 28 -- 2014ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி கிருஷ்ணா எழுதி இயக்கி வெளியான திரைப்படம் தான் நெடுஞ்சாலை. இப்படம் ஆஜு, சௌந்தரராஜன், தீரஜ் கெர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் ஆரி அர்ஜூன், ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தம்பி ராமையா, பிரசாந்த் நாராயணன் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில்லுன்னு ஒரு காதல் படம் செம ஹிட் ஆன படம். சூர்யா ஜோதிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருபார்கள். நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை இயக்கியவர் தான் நெடுஞ்சாலை படத்தையும் இயக்கி இருப்பார். அதனாலயே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இவரது இயக்கத்தில் பத்து தல படமும் வெளியானது.

அவரது நடிப்புக்குத் தீனி போடும் வகையில் அமைந்த படம் தான் நெடுஞ்சாலை. கதாநாயகியாக ஷிவதா நடித்திருந்த...