இந்தியா, மே 15 -- நடிகர் ரவி மோகனைச் சுற்றி சுற்றி வரும் வதந்திகளுக்கும் எதிர்வினைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் விதமாக ஒரு நீண்ட நெடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆர்த்தியுடனான தன் திருமண வாழ்க்கை குறித்தும் தன்னுடைய விவாகரத்திற்கான காரணம் குறித்தும் கெனிஷா குறித்தும் பேசியுள்ளார்.

அந்த அறிக்கையில், "நமது நாடு ஒரு பெரிய கூட்டு நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களோ, நீதிமன்றத்தில் உள்ள வழக்கைப் பற்றி பேசுவதோ எனக்கு வேதனை அளிக்கிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கை, இரக்கம் இல்லாமல் திரிக்கப்பட்ட வதந்திகளாக மாறுவதைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

எனது மௌனம் ஒரு பலவீனம் அல்ல - அது உயிர்வாழ்தல். எனது பயணத்தையோ அல்லது எனது வடுக்களையோ பற்றி அறியாதவர்களால் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்க...