இந்தியா, மே 25 -- அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து உள்ளார்.

கோவையில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு கருத்துகளை முதலமைச்சர் கூறி உள்ளார். தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி தருவதில்லை என்றும் அவர் சொல்லி இருந்தார்.

3ஆண்டுகள் புறக்கணித்த பின்னர் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார். ஏன் மூன்றாண்டு கா...