Chennai, மே 9 -- 4 மாநில காவல் துறையினர் தேடி வந்த மங்கி குல்லா கொள்ளையர்களை 2 வருடத்திற்கு பின்பு, திண்டுக்கல் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த மங்கி குல்லா கொள்ளையர்கள், கொள்ளை அடித்த பணத்தில், தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 இடம் வாங்கிப் போட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர்கள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள் என்பதும் தெரிய வந்தது.

தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம். காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், வடமதுரை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வைர நெக்லஸ், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவைகள் திருடு போயின.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்து, திண்டுக்கல் நகர...