இந்தியா, மார்ச் 11 -- மகளிர் சுய உதவிக்குழுவினர் 100 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை அடையாள அட்டையைக் காண்பித்து கொண்டு செல்லலாம் என மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அரசு ஆணையில், ''மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 08.03.2025 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா 2025ல் கலந்து கொண்டு, சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்பித்து, "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக, நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில், சுய உதவிக் குழு பெண்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்" என்று அறிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வெளியிடப்...