இந்தியா, ஜூன் 10 -- 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகள் மிகக் குறைவு என கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 2021 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதுவரையிலான கட்சி வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது கிடையாது என தெரிவித்தார்.

ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட...