இந்தியா, மே 23 -- ஹெல்மெட் போடாததாக கூறி சவுக்கு மீடியாவில் பயணியாற்றும் பணியாளர்கள் இருவரை காவல்துறை கொடுமை செய்வதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் சவுக்கு மீடியா நிறுவனர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது ஊடக நிறுவனத்தை முடக்குவதற்காக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் மற்றும் பொய் வழக்குகள் தொடரப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். "எனது வீட்டில் கழிவுநீர் மற்றும் மனித மலம் ஊற்றப்பட்டது. இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டேன்," என அவர் தெரிவித்தார். இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், சவுக்கு மீடியாவை மீண்டும் தொடங்கி நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க:- இன்றை...