இந்தியா, ஜூன் 9 -- நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்றைய தினம் தங்களது மூன்றாவது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினர். இது தொடர்பான போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்து கவிதை ஒன்றையும் இணைத்திருக்கிறார்.

அதில் அவர், ' எங்களை வேறு எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை (சிவப்பு இதயம்). நீங்கள் என் ஆன்மா எப்போதும் விரும்பியவர் (ஹாலோ முகம்).

இரண்டு பேரில் இருந்து நான்கு பேராக.இதைவிட அதிகமாக கேட்க முடியாது.. நீங்கள் எனக்கு அன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டினீர்கள்' இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாட்னர். உன்னை, எப்போதும் என்றென்றும் நேசிக்கிறேன்' என்று பதிவிட்டு இருக்கிறார்.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஜூன் 2022 -ல் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டின் அக...