இந்தியா, ஏப்ரல் 8 -- 1999-ல் தேர்தல் நடக்கும்போது திமுகவினர் யாரோடு கூட்டணி வைத்தீர்கள் என்றும்; சூடு சொரணை இருந்தால் ஒரு மனிதன் இதைப்பேசக் கூடாது என சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஈபிஎஸ் ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ''உண்மையிலேயே இந்த முதலமைச்சருக்கு தில்லு, திராணி தெம்பு இருந்திருந்தால், சட்டமன்றத்தில் எங்களுக்குப் பேச வாய்ப்பளித்து அதற்குண்டான பதிலை சட்டப்பேரவையில் பதிவு செய்தால் அவரை நாங்கள் வரவேற்போம். கோழைத்தனமாக, திட்டமிட்டு அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு, வேண்டுமென்றே எங்கள் மீது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்கின்றீர்களே! எந்த விதத்தில் நியாயம். இப்படி உரிமையைப் பறிக்கின்றபோது, ஜனநாயக முறைப்படி...